News August 5, 2024

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

image

2013இல் காங்கிரஸின் மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” எனப் பதிலளித்துள்ளார். இதே நிலைதான் தற்போதுவரை தொடர்வதால் வயநாடு நிலச்சரிவு பேரிடராக அறிவிக்கப்படுவது சந்தேகமே.

Similar News

News January 27, 2026

நாளை JEE தேர்வு.. இதை மறக்காதீங்க

image

பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் முதற்கட்ட தேர்வு நாளை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் செஷன் காலை 9 முதல் 12 மணி, இரண்டாவது செஷன் மதியம் 3 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது. இதில் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை, பள்ளி ஐடி கார்டு ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.

News January 27, 2026

சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

image

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.

News January 27, 2026

உங்க உப்புல அயோடின் இருக்கா?

image

உடலில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு, மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு அயோடின் மிக அவசியமாகும். இது நீங்கள் சாப்பிடும் உப்பில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழி உள்ளது. உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் உப்பை தூவி ஒரு நிமிடம் காத்திருக்கவும். அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை பிழியுங்கள். நீல நிறத்தில் உருளைக்கிழங்கு மாறினால் உப்பில் அயோடின் இருக்கிறது என அர்த்தம்.

error: Content is protected !!