News August 5, 2024

இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

image

இடஒதுக்கீட்டு எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால், 8801958383679/80, 8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தலைநகர் தாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 23, 2026

பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

image

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது

News March 23, 2026

புதுச்சேரியில் தவெக – நேமக கூட்டணி.. கடைசி நேர திருப்பம்

image

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக சுயேட்சை MLA நேருவின் நேயம் மக்கள் கட்சியுடன் (நே.ம.க) கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளையும் தவெக ஒதுக்கியுள்ளது. தவெக தனித்தே போட்டி என்ற முடிவை மாற்றிய விஜய், வேட்புமனு தாக்கலுக்கு 3 மணிநேரமே உள்ளபோது கூட்டணி அமைத்து, அக்கட்சிக்கு சீட்டும் வழங்கியுள்ளார்.

News March 23, 2026

மக்கள் பிரச்னைக்காக திமுகவிடம் பேசாத திருமா: EPS

image

பொம்மை CM ஸ்டாலின் நடத்திய திமுக காட்டாட்சி, சட்டம் ஒழுங்கை திருத்தியதாக தெரியவில்லை என EPS சாடியுள்ளார். நெல்லையில் பட்டியலின விவசாயி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, இதை பற்றி ஏன் திமுகவிடம் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சீட்டுகளுக்காக திமுகவிடம் பேசுபவர்கள், மக்கள் பிரச்னைகளையும் பேசலாமே எனவும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!