News August 5, 2024
சென்னையில் வெளுத்து வாங்கிவரும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், அண்ணா நகர், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Similar News
News March 20, 2026
அலர்ட்: 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

கோடை வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 26-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 1 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News March 20, 2026
வேட்புமனு.. ஒரு வாரம் கெடு விதித்த தவெக

தவெக வேட்புமனுக்கள் எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். அதன்படி, வேட்பாளர்களின் உறுதிமொழி பத்திரங்களை ஒரு வாரத்திற்குள் சட்ட வல்லுநர்களின் துணையோடு தயார் செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மா.செ.,க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். அவை தலைமை ஆய்வு செய்த பின்னரே இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
தவறு செய்துவிட்டேன்.. ஓபிஎஸ் வருத்தம்

வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியதுதான் என OPS வருத்தத்துடன் கூறியுள்ளார். தன்னை எப்படி கட்சியிலிருந்து நீக்கலாம் என்பதில்தான் EPS முழுமையாக செயல்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 9 பேரின் பதவி பறிப்பை தான் தடுத்து நிறுத்தியதாக குறிப்பிட்ட OPS, அந்த 9 பேரும் EPS உடன் சேர்ந்து தன்னை நீக்கியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


