News August 4, 2024
வங்கதேசத்தில் பயங்கர கலவரம்: 72 பேர் பலி

வங்கதேசத்தில் மீண்டும் பயங்கர கலவரம் ஏற்பட்டதில் 72 பேர் பலியாகியுள்ளனர். அரசுப் பணியில், தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்நிலையில், போராட்ட குழுவுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் கலவரம் வெடித்தது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News March 22, 2026
மாதம் 21 முறை விந்தணுவை வெளியேற்றினால்..

சுயஇன்பம் மூலம் விந்தணுக்களை வெளியேற்றுவதால் ஆண்மைக்கு ஆபத்து என்ற பேச்சுகள் உலா வருகின்றன. இந்நிலையில், மாதத்திற்கு 21 முறை விந்தணுக்களை வெளியேற்றினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரின் ஆபத்து 30% குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விந்தணு வெளியேறும்போது புரோஸ்டேட் சுரப்பியில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுவதால், கேன்சர் பாதிப்பு குறைகிறதாம்.
News March 22, 2026
ஸ்டிக்கர் ஒட்டுகிறதா தவெக?

தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர்சில்வர் பாத்திரங்கள், பூஸ்ட் பாக்ஸ், குடிநீர் பாட்டில் என அடுத்தடுத்து சிக்குவது செய்திகளாக வெளியாகின்றன. ஆனால், மற்ற கட்சிகளும் ஹாட் பாக்ஸ் என பரிசுப் பொருள்களை வழங்கும்போது எப்படி தவெக மட்டும் ஹெட்லைனில் வருகிறது என்று தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இது அரசியல் களத்தில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News March 22, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏன்?

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 20 -ல் போட்டியிட காங்., விரும்பிய நிலையில், அதற்கு திமுக சம்மதிக்கவில்லை; இதனால், 20 தொகுதிகளில் இருந்து 17-ஆக குறைத்துக்கொண்ட காங்கிரஸ், மீதமுள்ள 13 தொகுதிகளில் திமுக 11, விசிக 1, இந்திய கம்யூ., 1 தொகுதிகளை என ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், காங்., 15 என்றால் எங்களுக்கு 15 என்ற நிலைப்பாட்டிலேயே திமுக இருப்பதால், இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.


