News August 4, 2024
சென்னையில் தற்போதும் வாழும் மன்னர் குடும்பம்

ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி இந்த மஹாலை 1876 ஆம் ஆண்டு நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
Similar News
News September 20, 2025
நாளை தொடங்குகிறது ’சென்னை ஒன்’ திட்டம்

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ எனும் செயலியை நாளை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். இதன்படி, பயணியர் வெளியில் செல்லும்போது எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை குறிப்பிட்டு கட்டணம் செலுத்தினால், அதற்கு, க்யூ.ஆர்., குறியீட்டு டிக்கெட் மொபைல் போனில் கிடைக்கும்.
News September 20, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (19.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 19, 2025
சென்னை அம்மா உணவக பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள் 65 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக அம்மா உணவக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.