News August 4, 2024

விளையாட்டு வீரர்களை பாராட்டிய அமைச்சர்

image

இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற செவி மாற்றுத்திறனாளிகளுக்கான T20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரையும் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.

Similar News

News September 20, 2025

நாளை தொடங்குகிறது ’சென்னை ஒன்’ திட்டம்

image

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ எனும் செயலியை நாளை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். இதன்படி, பயணியர் வெளியில் செல்லும்போது எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை குறிப்பிட்டு கட்டணம் செலுத்தினால், அதற்கு, க்யூ.ஆர்., குறியீட்டு டிக்கெட் மொபைல் போனில் கிடைக்கும்.

News September 20, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (19.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 19, 2025

சென்னை அம்மா உணவக பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

image

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள் 65 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக அம்மா உணவக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!