News August 4, 2024

திருவள்ளூரில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை கொட்டி தீர்த்தது

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று மாலை திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 4 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் திருவள்ளூரில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

Similar News

News February 10, 2026

திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

திருவள்ளூரில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 10, 2026

பூந்தமல்லி மெட்ரோ சேவைக்கு இறுதி ஆய்வு!

image

பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு நாளை (பிப்.11) இறுதி ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை நிறுத்தங்களையும் மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வை மேற்கொள்ளும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம், பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது.

error: Content is protected !!