News August 4, 2024
மாணவர்களுக்கு திறனாய்வுப் தேர்வுகள்

தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
Similar News
News February 8, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்

திருப்பூர் தெற்கு போலீசார் பூ மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அங்கேரிபாளையம், அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த சர்மிளா(49) என்பதும் அவர் அந்த பகுதியில் கேரளா லாட்டரி விற்றதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 10 கேரளா லாட்டரியை பறிமுதல் செய்தனர்.
News February 7, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.07) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News February 7, 2026
திருப்பூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

திருப்பூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<


