News August 4, 2024
வேலூர் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி நியமனம்

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஐ.பி.எஸ். அதிகாரி என். தேவராணி மீனா வேலூர் சரக டி.ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை பெருநகர கிழக்கு இணை ஆனையராக மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News April 3, 2026
வேலூர் மாவட்டம்- ஓர் பார்வை!

1.மாநகராட்சி: 1 (வேலூர்)
2.நகராட்சி- 2 (குடியாத்தம்,பேரணாம்பட்டு)
3.பேரூராட்சிகள்- 4
4.வருவாய் கோட்டம்- 2
5.வருவாய் வட்டங்கள் – 06
6.வருவாய் கிராமங்கள்- 317
7.ஊராட்சி ஒன்றியம்- 07
8.கிராம பஞ்சாயத்து- 247
9.MP தொகுதி – 1 (வேலூர்)
10.MLA தொகுதி- காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்)
11.மொத்த பரப்பளவு – 1336.42 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News April 3, 2026
வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர்களின் இருப்பு விவரம், விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர்களை பதுக்குவது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் பணியாளர்கள், முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.
News April 3, 2026
வேலூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அரும்பருத்தி பகுதியை சேர்ந்த சிவா (32) தொழிலாளி. இவரது மனைவி திலவவதி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிவா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பிரம்மபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


