News August 4, 2024
இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை
பெய்யக்கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News October 14, 2025
BREAKING: விஜய் புதிய முடிவு.. விரைவில் தேதி அறிவிப்பு

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அக்.17-ம் தேதி விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், N.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், விஜய் கரூர் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்திக்கும் புதிய தேதியை ஓரிரு நாள்களில் N.ஆனந்த் தெரிவிப்பார் என நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
News October 14, 2025
விரிசல் இல்லாத குண்டு குலாப் ஜாமுன்.. இப்படி பண்ணுங்க

தீபாவளிக்கு குலாப் ஜாமுன் செய்யும் போது இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. குண்டு குண்டா உடையாமல் சூப்பரா வரும். *மாவை சலித்து பயன்படுத்தவும். *1 ஸ்பூன் நெய் சேர்த்து தண்ணீரை தெளித்து தெளித்து மாவு பிசையவும். *மாவை உள்ளங்கையில் நன்கு அழுத்தி உருட்டவும். *கோலி குண்டு சைஸில் மாவு உருட்டுங்கள். *எண்ணெய் சூடான பிறகு உருண்டையை உள்ளே போட்டு வறுக்கவும். *கிளறிக் கொண்டே இருந்தால் மாவின் உள்ளே நன்கு வேகும்.
News October 14, 2025
அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: CM ஸ்டாலின்

சென்னையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய CM, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் DCM உதயநிதி செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார். முதல்வர் கோப்பை போட்டியில் வெல்வோருக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனவும் CM உறுதியளித்துள்ளார்.