News August 4, 2024
விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அருகே நிவேஷ் மற்றும் ஹரி ஆகிய இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது, எதிரில் வந்த ஜீப் மீது நேருக்கு நேர் மோதினார்கள். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். வாகனத்தை ஓட்டி வந்த ஹரி ஜீப் மீது மோதி, மேலே பறந்து முன் பகுதியில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஹரி உயிரிழந்தார்.
Similar News
News September 18, 2025
ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 18, 2025
ஈரோடு: நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

ஈரோடு: சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரி வலசையைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. இவர் தோட்டத்தில் 57 செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(செப்.17) இரவு இந்த ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். தெரு நாய்கள் 3 மேற்பட்ட நாய்கள் பட்டியல் புகுந்து 29 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 7ஆடுகள் இறந்துவிட்டன. 22 ஆடுகள் காயம் அடைந்துள்ளன.
News September 18, 2025
ஈரோடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே…, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA,M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <