News August 4, 2024

3,400 பேரிடம் ₹200 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

image

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி, நாடு முழுவதும் 3,400 பேரிடம் ₹200 கோடி மோசடி செய்த 4 உ.பி. இளைஞர்களை புதுச்சேரி போலீஸ் கைது செய்தது. பேஸ்புக் பக்கத்தில் போலி விளம்பரம் வெளியிட்டு, அதில் தொடர்பு கொண்ட 3,400 பேரிடம், இந்த நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட புதுச்சேரி நபர் ஒருவரின் புகாரின்பேரில் விசாரணை நடத்தி, 4 பேரையும் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது.

Similar News

News August 15, 2025

ராசி பலன்கள் (15.08.2025)

image

➤ மேஷம் – பக்தி ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – பயம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – பிரீதி ➤ விருச்சிகம் – உயர்வு ➤ தனுசு – வரவு ➤ மகரம் – தடங்கல் ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்சொல்.

News August 15, 2025

ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் நிலைத்திருக்கும்: ஜனாதிபதி

image

இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

சீனாவுடன் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க முடிவு

image

5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 கல்வான் மோதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!