News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள 2,16,292 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

Similar News

News November 9, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இதனை மீறி உரிமம் பெறாமல் செயல்படும் மறுவாழ்வு மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

News November 9, 2025

நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 8, 2025

நாகூரில் கந்தூரி முன்னேற்பாடுகள் அமைச்சர்கள் ஆய்வு

image

புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469வது கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!