News August 4, 2024

நீதிமன்ற நடைமுறையால் மனம் தளரும் மக்கள்: சந்திரசூட்

image

இந்தியாவின் நீதிமன்ற நடைமுறைகளால் ஏழை எளிய மக்கள் மனம் தளர்ந்துவிடுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சிறப்பு லோக் அதாலத் தொடக்க நிகழ்வில் பேசிய அவர், பொதுமக்களின் வீடுகளுக்கே நீதியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே லோக் அதாலத்தின் நோக்கம். பிரச்னைகளுக்கான தீர்வையே மக்கள் தேடுகின்றனர். அதனை தாமதிக்காமல் வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Similar News

News August 21, 2025

Online Gaming மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது

image

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை உள்ள நிலையில், புதிய மசோதா சட்டமானால் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். உங்கள் கருத்து என்ன?

News August 21, 2025

குங்குமம் கொட்டினால் அபசகுணமா?

image

குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!

News August 21, 2025

BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!