News August 4, 2024

9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

image

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Similar News

News August 19, 2025

பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

image

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News August 19, 2025

NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

image

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.

News August 19, 2025

கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

image

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

error: Content is protected !!