News August 4, 2024

5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

image

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.

Similar News

News October 14, 2025

போலி மருந்துகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

image

நாடு முழுவதும் 3,000 நிறுவனங்களில் தயாரிக்கப்படும் 10,500 மருந்துகளை ஆய்வு செய்ய 1,467 ஆய்வாளர்களே பணியில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. TN-ல் 112 மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். Coldrif Syrup குடித்த 22 குழந்தைகள் பலியான சம்பவத்தால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக ஆய்வு செய்யாததால் பல மாநிலங்களில் போலி & தரமற்ற மருந்துகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News October 14, 2025

உங்களின் சாய்ஸ் எது?

image

சீனியர் ஹீரோக்கள் இல்லாமல் இந்த வருடம் தீபாவளி ட்ரீட்டாக பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன. இந்த 3 படங்கள் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்துவிட்டன. இவற்றில், உங்களின் ஆர்வத்தை தூண்டிய படம் எது.. கமெண்ட் பண்ணுங்க?

News October 14, 2025

BREAKING: அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

image

மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவினன்குடியில் சிவசங்கர் தலைமையில் 2015-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரை விடுவித்து கடலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!