News August 4, 2024
5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.
Similar News
News November 29, 2025
அப்போ ட்ரோல், இப்போ பாராட்டு: லிங்குசாமி

சூர்யாவின் ‘அஞ்சான்’ நேற்று ரீரிலீஸானது. இந்நிலையில், இப்படம் முதலில் ரிலீஸானபோது பலரும் ட்ரோல் செய்ததாக அதன் இயக்குநர் லிங்குசாமி வருத்தப்பட்டுள்ளார். ஆனால், இந்த படத்தையா ட்ரோல் செய்தார்கள் என தற்போது பலர் தன்னிடம் கூறியதாக நெகிழ்ந்துள்ளார். மேலும், தான் இயக்கிய மேலும் சில படங்களை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். லிங்குசாமியின் எந்த படத்தை ரீரிலீஸ் செய்யலாம்?
News November 29, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 29, 2025
மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.


