News August 3, 2024
கோர விபத்துகளில் 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
Similar News
News August 24, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்!

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.
News August 24, 2025
Tech Talk: ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

உங்களை பற்றி சர்வமும் அறிந்துவைத்திருக்கும் உங்கள் ஃபோன் Hack ஆகாமல் பார்த்துக்கொள்ள சில வழிகள் இருக்கிறது. ▶Playstore-ல் இல்லாத செயலிகளை பதிவிறக்க வேண்டாம். ▶தெரியாத எண்ணில் இருந்து வரும் Link-குகளை க்ளிக் பண்ணாதீங்க. ▶தொலைபேசியை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். ▶Password Save பண்ண வேண்டாம் ▶App-களை அப்டேட் செய்யுங்கள் ▶பொது Wifi-களை பயன்படுத்த வேண்டாம். SHARE.
News August 24, 2025
தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.