News August 3, 2024
திருச்செந்தூர் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

திருச்செந்தூரின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். ஆடிப் பெருக்கை ஒட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சென்று முருகனை வழிபட்டனர்.
Similar News
News October 22, 2025
தூத்துக்குடியில் கோவிலில் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே சிலுவைப்ட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் கடந்த 18-ம் தேதி கோவிலில் இருந்த வெண்கல மணி, குத்துவிளக்கு, பூஜை பொருள்கள் மற்றும் ரூ.20000 ஆகியவை திருடு போனது. இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, பால விக்னேஷ், முகேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருடு போன பொருட்களை மீட்டனர்.
News October 22, 2025
கோவில்பட்டி: முதல்வர் ஸ்டாலின் வருகை ரத்து

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள்(அக்.24) கோவில்பட்டியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் திருஉருவச் சிலையையும் திறந்து வைக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் BANK வேலை

தூத்துக்குடி மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <