News August 3, 2024

பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலி

image

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஹோட்டலுக்குள் புகுந்த அல் ஷபாப், ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்த பலரை பணய கைதியாகவும் பிடித்து வைத்திருந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பணய கைதிகள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

Similar News

News September 18, 2025

ரணகளமாகும் களம்: சூப்பர் 4 சுற்றில் மீண்டும் IND vs PAK !

image

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய UAE உடனான போட்டியில் வென்றதன் மூலம், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், வரும் 21-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

News September 18, 2025

19 பேர் பலி: கேரளாவில் அமீபா அரசியல்

image

கேரளாவில் <<17718285>>மூளையை உண்ணும் அமீபாவால்<<>> பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளும் அரசு புள்ளிவிவரங்களை மறைப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கடந்த 2016-ல் முதல் பாதிப்பு ஏற்பட்டபோது முதல் ஆட்சியில் இருக்கும் இந்த CPM அரசு, இது தொடர்பான முறையான நடவடிக்கை எடுக்காததால், கடந்த 15 நாள்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சாடியுள்ளன.

News September 18, 2025

காமராஜர் பொன்மொழிகள்

image

*படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். *ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். *ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும். *லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.

error: Content is protected !!