News August 3, 2024

நெல்லையில் மாநில அளவிலான செஸ் போட்டி தொடக்கம்

image

ஏழு வயது பிரிவுக்குட்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி பாளை வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து இன்று(ஆக.03) நடைபெற்றது.இந்த போட்டியினை பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் செப்டம்பர் மாதம் மைசூரில் நடைபெறும் தேசியப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

Similar News

News November 10, 2025

நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.

News November 10, 2025

நெல்லை: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

image

களக்காடு சிங்கிகுளம் இந்திரா நகரை சேர்ந்த காயத்ரி இந்த மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 5ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 10, 2025

நெல்லையில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

image

திசையன்விளை அருகே நந்தன்குளம் பகுதியில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் அவரது மனைவி பூரணி மகன் மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு விரக்தியடைந்த வெங்கடாசலம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!