News August 3, 2024

கோவையில் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை ஆக.9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள ரூ.460 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், கலைஞர் நூலகம், அறிவுசார் மையம், ஆதரவற்றோர் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

Similar News

News January 17, 2026

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

உஷார்..கோவையில் மின் தடை அறிவிப்பு!

image

கோவை: மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன் புதூர் மற்றும் வலையபாளையத்தின் சில பகுதிகள், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது

News January 17, 2026

அன்னூர்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி!

image

அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வரும் செல்லமுத்து(30), ஊருக்குச் செல்வது தொடர்பாக மனைவி காயத்ரியுடன்(29) தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த காயத்ரி, கொதிக்கும் எண்ணெயைக் கணவன் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த செல்லமுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!