News August 3, 2024
தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு பணி நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2011-12 கல்வியாண்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த தற்காலிக பணிக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
7 ரூபாய் மட்டுமே.. தினமும் 2GB ரீசார்ஜ் ஆஃபர்

தினமும் ₹7 என்ற கணக்கில், ₹350 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 50 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். இதுமட்டுமின்றி BiTV சேவை இலவசமாக வழங்கப்படுவதால் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்ஸை பார்த்து மகிழலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு BSNL இணையதளத்தை அணுகவும். SHARE IT
News November 13, 2025
ஷமி ஏன் அணியில் இல்லை? கேப்டன் சுப்மன் கில் பதில்!

ஷமி ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியுள்ளார். தற்போது அணியில் உள்ள பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அவர், வருங்காலத்தில் ஷமி அணியில் இடம் பெறுவாரா என்பதற்கு அணி தேர்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றார்.
News November 13, 2025
எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.


