News August 3, 2024
உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 2 படகுகள், வலைகள், மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கைது படலம் தொடர்வதாக தமிழ்நாடு மீனவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
News January 13, 2026
FLASH: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்

சர்வதேச சந்தையில் நேற்று போலவே இன்றும், தங்கம் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,592 ஆக மாறியுள்ளது. இதனால், இன்றும் இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை(₹1,04,960) எட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
News January 13, 2026
விஜய்யிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக CBI விசாரணைக்கு விஜய் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, கூட்ட நெரிசல் நடந்தது எப்படி? எத்தனை பேர் கூடுவார்கள் என்பது முன்பே தெரியுமா? பரப்புரைக்கு தாமதமாக வர காரணம் என்ன? போலீசார் தடியடி நடத்தியது தெரியுமா? என்பது உள்ளிட்ட 100 கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


