News August 3, 2024

நெல்லை அருகே மரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து

image

திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரத்தில் விஜயநாராயணம் கேந்திரா வித்யாலயா பள்ளி தனியார் வாகனம் இன்று காலை 8 மணியளவில் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News July 10, 2025

செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

image

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

News July 10, 2025

நெல்லை: 23 கொலைகள்; கதி கலங்கும் மக்கள்

image

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களுக்காக 22 கொலை வழக்குகளில் 23 உயிர்கள் பறிபோயுள்ளன. இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன.

News July 9, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை-09] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!