News August 3, 2024
நீலகிரி: மாணவர்களுக்கு ரூ.28 கோடி கல்விக் கடன்

உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கல்விக் கடன் வழங்குவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 கல்வியாண்டில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
Similar News
News November 12, 2025
நீலகிரி: G Pay, PhonePe இருக்கா?

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 12, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு உதகை கேர்ன்ஹில் வன அலுவலகம், பொருள்விளக்க மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதி குறைகளை நேரில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
News November 12, 2025
கூடலூர் ஜீன்பூல் மலையேற்றம்: க்யூ ஆர் கோட் வெளியீடு

தமிழ்நாட்டில் மலையேற்றம் செல்ல ஆர்வமாக உள்ளவர்களுக்காக அரசு சார்பில் ‘டிரக் தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 இடங்களில் மலையேற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து இரு வழி பயணமாக எட்டு கிலோமீட்டர் பயண வழிகாண க்யூ ஆர் கோட் வெளியிடப்பட்டுள்ளது.


