News August 3, 2024
நெல்லைக்கு புதிய ஏ.பி.ஆர்.ஓ நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இருவர் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் நெல்லைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
நெல்லை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க…
News August 18, 2025
நெல்லை மக்களே ஆன்லைன் லோன் உஷார்…!

நமது நெல்லை மக்களே, உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புகார்களுக்கு: 1930 அழையுங்க… நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு SHARE செய்து உஷார்படுத்துங்க…!
News August 18, 2025
நெல்லை மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.