News August 3, 2024

நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.7 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்து பயன் பெறலாம் என்றார்.

Similar News

News January 15, 2026

நெல்லை: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

image

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.

News January 15, 2026

நெல்லை மாநகரில் 600 போலீசார் குவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக 600 போலீசார் நெல்லை மாநகர பகுதிகளில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!