News August 3, 2024
நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.7 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை மக்கள் அளித்து பயன் பெறலாம் என்றார்.
Similar News
News November 8, 2025
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்திமணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது கைபேசி விபரங்கள் மாநகர காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
News November 8, 2025
பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE
News November 8, 2025
நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.


