News August 3, 2024

900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 28 இடங்களில் நடந்த முகாமில் 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதில், 250 பேருக்கு புதிதாக வங்கி கணக்கு புதுப்பிக்கப்பட்டது.

Similar News

News August 14, 2025

புதுகை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.,14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதுகை மாநகராட்சி 16வது வார்டு வர்த்தக சங்க கட்டிடத்திலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வேங்கடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுமாவடி பிஎம்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மேலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு முல்லை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர்

News August 14, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை(ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் எஃப் எல் ஒன், எஃப் எல் 2, எஃப் எல் 3, எப் எல் ஏ3, எஃப் எல் ஏஏ உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும், மதுபான பார்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!