News August 3, 2024

நெல்லை சரகத்தில் 17 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம்

image

திருநெல்வேலி சரக காவல் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் நெல்லை சரகத்தில் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் சங்கரன்கோவிலுக்கும், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி நெல்லை சிறப்பு பிரிவுக்கும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் சேரன்மாதேவிக்கும் என 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 12, 2025

நெல்லை: பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

image

தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் குரு விநாயகம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இந்த மனுவின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் இன்று முதன்மை கல்வி அதிகாரியால் பணி நீக்கம் செய்யபட்டார்.

News September 12, 2025

நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2025

நெல்லையில் ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர்

image

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியிருக்கிறார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பயணிகள் இந்த ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!