News August 3, 2024
ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News October 21, 2025
பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியா காரணம்

இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம்பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
News October 21, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள், வகுப்பறைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளாகத்திலுள்ள செடி, கொடிகளை அகற்றவும், திறந்த வெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
நவ.1 கடைசிநாள்.. சீனா மீது 155% வரி: டிரம்ப் வார்னிங்

வரும் நவ.1-ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால், சீனா மீது 155% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எனவும், இம்மாத இறுதியில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.