News August 2, 2024
சென்னை எழிலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை நிலவரங்களை கேட்டறிந்தார். அதேபோல, மேட்டூர் அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மாவட்டங்களில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
Similar News
News January 1, 2026
TN-ன் நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது: ப.சிதம்பரம்

ஒரு மாநிலத்தின் கடனை வைத்து அதன் பொருளாதார நிலையை மதிப்பிடுவது பிழையானது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். <<18700197>>பிரவின் சக்ரவர்த்தியின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், TN-ன் நிதி பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார். மேலும், மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை சதவீதம் என்பதே பொருத்தமான அளவை எனவும், TN-ல் இந்த அளவையானது, தொடர்ந்து நிலையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
பொங்கல் பரிசு பணம்… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

பொங்கல் பரிசுத் தொகைக்கான தமிழக அரசின் அறிவிப்பு குறித்து தகவல் கசிந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 1 கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசாக தலா ₹3,000 வழங்குவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று (அ) நாளைக்குள் அறிவிக்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 1, 2026
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ₹1.75 லட்சம் கோடி

2024 டிசம்பர் மாதத்தை விட இந்தாண்டு ஜிஎஸ்டி வசூல் 6.1% அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் ₹1.64 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2025 டிசம்பர் மாதம் ₹1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2025-26 நிதியாண்டில் ₹16.5 லட்சம் கோடி வசூலித்து, 8.6% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


