News August 2, 2024
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

வீட்டில் உள்ளவர்கள் அவசர நேரத்திற்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON-ல வெச்சுக்கோங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.
News October 28, 2025
FLASH: 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘மொன்தா’ புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. எண்ணூரில் தொடர்மழை பெய்து வருவதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். புயல் இன்று மாலை கரையை நெருங்கும் போது மணிக்கு 90 – 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்.
News October 28, 2025
நேற்று விஜய் சென்ற ரிசார்ட்டில் இன்று CM ஸ்டாலின்!

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.


