News August 2, 2024

7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

image

இந்தியாவில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.5% அதிகமாகும். சுமார் 5.27 கோடி பேர் புதிய வருமான வரி விகித முறையிலும், 2.01 கோடி பேர் பழைய வருமான வரி முறையிலும் ஐடி தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 72% பேர் புதிய வருமான வரி விகித முறைக்கு மாறியுள்ளனர். 58.57 லட்சம் பேர் முதல்முறையாக ஐடி தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News December 26, 2025

காலணி தொழிற்சாலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

image

உளுந்துார்பேட்டை சிப்காட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காலணி தொழிற்சாலையை CM ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ₹1,350 கோடி மதிப்பிலான தொழிற்சாலையின் 50% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் ₹139 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் ஆபிஸ் உட்பட ₹1,774 கோடியில் 314 முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர், 2.16 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

News December 26, 2025

ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

3 ஆண்டுகளாகியும் கிடைக்காத வேங்கைவயல் நீதி!

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிச.26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாமல், நீதி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியாக மாற வாய்ப்புள்ளது.

error: Content is protected !!