News August 2, 2024

மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி

image

எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நட்டா அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த விவரமும் இல்லையென எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News November 3, 2025

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பொழியும்

image

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், T.V.மலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News November 3, 2025

நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

image

தூங்கும் போது நீங்கள் இறப்பது போல் கனவுகள் வந்தால் அச்சம் வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப் போகிறோம் என்பதுதான். இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம். மாற்றம் நல்லதுக்கு தான் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

News November 3, 2025

கார்த்திகாவிற்கு 100 சவரன் நகை பரிசு: மன்சூர் அலிகான்

image

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வெல்ல காரணமாக விளங்கிய ‘கண்ணகி நகர்’ கார்த்திகாவை, மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக களமிறங்கி தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 சவரன் நகையை பரிசாக அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!