News August 2, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய உத்தரவு

image

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

டிசம்பர் 29: வரலாற்றில் இன்று

image

*1904 – கவிஞர் குவெம்பு பிறந்தநாள்
*1960 – ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் பிறந்தநாள்
*1974 – நடிகை டுவிங்கிள் கன்னா பிறந்தநாள்
*1987 – 326 நாள்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்
*2015 – அறிஞர் தமிழண்ணல் நினைவுநாள்

News December 29, 2025

ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

image

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 13 சுற்றுகள் முடிவில், 4 வீரர்கள் தலா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தனர். இதையடுத்து டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி 3-ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில், கோனெரு ஹம்பி வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். மேக்னஸ் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

News December 29, 2025

ரஷ்யா, உக்ரைன் போர்.. டிரம்ப் முக்கிய தகவல்

image

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரலாம் அல்லது நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போரினால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இந்த போரை நிறுத்துவது மிகவும் சிரமமானது என டிரம்ப் குறிப்பிட்டார்.

error: Content is protected !!