News August 2, 2024
நிலச்சரிவில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய, 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படவேட்டு குன்னு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை, 3 நாள்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் ராணுவம் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 4 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News July 11, 2025
கோலிவுட்டில் ஜாதி இல்லையா? கலையரசன் பரபரப்பு Statement!

தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.
News July 11, 2025
பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.