News August 2, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் அறிவிப்பு

செந்தில்பாலாஜி வழக்கில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரிய மனு மீது, இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
தவெகவில் இருக்கிறேன்.. முதன்முறை உறுதி செய்த SAC

நான் இப்போது தவெகவில் இருக்கலாம், ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த கட்சியிலும் இல்லை என்று SA சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியை தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். என் ரத்தம் விஜய், எதற்காகவும் பயப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். தந்தை – மகன் இடையே முரண்பாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதல்முறையாக தான் தவெகவில் இருப்பதாக SAC உறுதிப்படுத்தியுள்ளார்.
News October 18, 2025
ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நடைபயிற்சி என்பது பெரிதும் உதவும்◆2 நிமிடங்கள் நடந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ◆10 -15 நிமிடங்கள் நடந்தால், மன அழுத்தம் குறையும் ◆30 நிமிடங்கள் நடந்தால், உடலின் கொழுப்பு கரையும் ◆45 நிமிடங்கள் நடந்தால், எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நிம்மதி அடைவீர்கள் ◆60 நிமிடங்கள் நடந்தால், டோபமைன் சுரந்து மனதில் சந்தோஷம் கூடும். ட்ரை பண்ணி பாருங்க. SHARE IT.
News October 18, 2025
திராவிடத்திற்கும் EPS-க்கும் சம்பந்தமில்லை: சிவசங்கர்

திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாது என கூறிய EPS, திராவிட மாடலுக்கு நான் தான் உதாரணம் என்று சொல்வது கேவலமான கூத்து என SS சிவசங்கர் விமர்சித்துள்ளார். EPS-ஐ பொறுத்தவரை கட்சி, கொள்கை என்று எதுவுமே கிடையாது, அமித்ஷா திமுக என்ற நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாகவும் சாடினார். அதிமுக எனும் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தும் EPS-க்கும் திராவிடத்துக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டார்.