News August 2, 2024

கேரளாவிற்கு ₹15 லட்சம் நிதி : திருமா

image

வயநாட்டில் நிலச்சரிவுப் பேரிடரால் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர் என்று திருமாவளவன் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். புதையுண்ட பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இப்பேரிடரை “தேசியப் பேரிடராக” அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திய அவர், இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள அரசுக்கு விசிக சார்பில் ₹15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

image

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

ஈரானில் 3,428 பேர் பலி.. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது

image

உலகெங்கும் பல இடங்களில் நடைபெற்று வரும் போரால் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானை நிலைகுலையச் செய்துவரும் உள்நாட்டு போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிரான போரில் ஜென் Z தலைமுறையினரின் தீவிர போராட்டத்தில் பொதுமக்களும் சிக்கி உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரான் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

News January 15, 2026

ஏன் ஜன.15 ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது?

image

ஏப்ரல் 1, 1895-ல் இந்திய ராணுவம் நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, கடைசி பிரிட்டிஷ் Commander in chief ஜெனரல் பிரான்சிஸ், 1949 ஜனவரி 15-ல் தான் இந்திய தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பாவிடம் ராணுவத்தை ஒப்படைத்தார். அதனை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ராணுவத்தின் வீரம், தியாகம் போன்றவற்றை நாமும் ஒரு கணம் நினைவுகூர்வோம்.

error: Content is protected !!