News August 2, 2024
தொண்டாமுத்தூரில் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Similar News
News August 12, 2025
கோவையில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

கோவை கோட்டப்பாளையத்தில் புகழ்பெற்ற வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHAREit
News August 12, 2025
கோவை: IT-இல் செல்ல ஆசையா? இலவச Python பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Pythonபயிற்சி வழங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Data Analytics, Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது.. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News August 12, 2025
கோவை: வனப்பகுதியில் முதியவர் எலும்பு கூடாக மீட்பு

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடப்பட்டி பிரிவு வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக காரமடை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்ததில், இறந்தவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மாயமான வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த முருகன்(70) என்பதும், மன உளைச்சலால் மருந்து குடித்து தற்கொலை செய்ததும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.