News August 2, 2024

பல்லாவரம் – கூடுவாஞ்சேரி ரயில் சேவை ரத்து

image

நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

Similar News

News February 25, 2026

சென்னை: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

சென்னையில் வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News February 25, 2026

சென்னை: நண்பனை கத்தியால் சரமாரியாக வெட்டிய கொடூரம்!

image

பீகாரை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் மன்கி (34),ஒடிசாவை சேர்ந்த தீபக் மஜி, ஜார்க்கண்டை சேர்ந்த பிஜல் மஹேடா ஆகியோர் அக்கரை, கெனால் சாலையில் உள்ள கண்டெய்னர் ரூமில் மது அருந்தினர். அப்போது, தீபக் மது பாட்டிலை தட்டிவிட்டதால் சத்தியேந்திரகுமார் தீட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் மஜீ, அவரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். புகாரின் பேரில் தீபக் மஜியை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!