News August 2, 2024
வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 6, 2025
திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<
News August 6, 2025
பூம்பாறை மலை கிராம மாணவர் மருத்துவம் படிக்க தேர்வு

கொடைக்கானல், பூம்பாறை மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் யாதேஷ் அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 525 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார், மேலும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தற்போது தேர்வாகியுள்ளார், இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவர் யாதேஷ்சை வாழ்த்தி வருகின்றனர்.
News August 5, 2025
திண்டுக்கல்: NO Exam ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <