News August 1, 2024

மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மாஞ்சோலையை சேர்ந்தவர்கள் அளித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என டேன் டீ நிர்வாகமும் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News September 12, 2025

நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2025

நெல்லையில் ஒத்த கையில் அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர்

image

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியிருக்கிறார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பயணிகள் இந்த ஓட்டுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 12, 2025

நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476,9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!