News August 1, 2024
அரசு அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக, பெயரை பரிந்துரை செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 6,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News November 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!


