News August 1, 2024
ஆற்றுப்படுத்துனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பபூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 42 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் முகவரிக்கு அனுப்பலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
வேப்பூர் அருகே வாலிபர் தலை நசுங்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியின் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளரான மாளியப்பட்டு வேலு, தேங்காய் வியாபாரம் தொடர்பாக ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தேங்காய் விற்பனையோடு பம்பை அடிக்கும் தொழிலும் செய்து வந்தார்.
News September 11, 2025
மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு

ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையம் (IVPM) மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 15.09.2025 முதல் தொடங்குகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 11 வகையான தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம். ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 7010307003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News September 11, 2025
காவல்துறை இரவு வந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100