News August 1, 2024
அரசு பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க விருப்பமா?

குமரி மாவட்டத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்த குட்விஷன் நிறுவனம் 100 தன்னார்வலர்களை மாதம் ரூ.8000 ஊதியத்தில் நியமிக்க உள்ளது. ஆங்கில வழி கல்வி பயின்ற பட்டதாரிகள், ஆங்கில திறமை மிக்கவர்கள் இன்று (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு கருங்கல் பாலூர் குட்விஷன் அலுவலகத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 29, 2025
கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News April 29, 2025
95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்

தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.