News July 31, 2024
நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆகஸ்ட் 7-ஆம் தேதி பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சூரியம்பாளையம் செங்குந்தர் பாவடி திருமண மண்டபத்தில், சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை நெசவாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.
News September 4, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.3 நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – வெங்கடாசலம் ( 949869150), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News September 3, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.