News July 31, 2024

19ஆவது ஓவரை ரிங்கு வீசியது ஏன்? சூர்யகுமார் பதில்

image

ரிங்கு சிங் வலைப்பயிற்சியின்போது, சிறப்பாக பந்து வீசியதால், இலங்கைக்கு எதிரான போட்டியில்
பந்துவீச கூறியதாக, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். 20ஆவது ஓவரை விட, 19ஆவது வீசுவது என்பது கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்ற அவர், ரிங்குவின் திறமை மீது இருந்த நம்பிக்கையால் அவரிடம் அந்த பொறுப்பை வழங்கியதாகவும் கூறினார். இந்த போட்டியில் ரிங்கு சிங் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Similar News

News August 9, 2025

அப்பாவை நினைத்து கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்

image

ரி-ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் தந்தை விஜயகாந்தை எண்ணி மேடையிலேயே விஜய பிரபாகரன் கண்ணீர் வடித்தார். நா தழுதழுக்க பேசிய அவர், தனக்கு MP பதவி எல்லாம் முக்கியமல்ல என்றும் விஜயகாந்தின் மகன் என்பதே முக்கியம் எனவும் உருக்கமாக குறிப்பிட்டார். தந்தையை மிஸ் பண்ணுவதாலேயே அவர் இறந்து ஓராண்டாகியும் அழுவதாக விஜய பிரபாகரன் பேசினார்.

News August 9, 2025

அரசு ஊழியர்களுக்கு 3% சம்பள உயர்வு?

image

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான
ஜூலை-டிசம்பர் மாதத்துக்கான அகவிலைப்படி தீபாவளிக்கு முன்னதாக உயரக்கூடும் என தகவல்கள் உள்ளன. இதன்மூலம் 55% இருந்த அகவிலைப்படி 3% சதவீதம் உயர்ந்து 58% வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படுகிறது. முன்னதாக ஜனவரியில் 2% உயர்ந்ததால் 53% இருந்த அகவிலைப்படி 55% ஆனது.

News August 9, 2025

பெங்களூருவில் ₹1650 கோடியில் பிரமாண்ட ஸ்டேடியம்

image

பெங்களூருவில் RCB அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தை நகரின் மைய பகுதியிலிருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொம்மசந்திராவில் ₹1,650 கோடி செலவில் 80,000 இருக்கைகளுடன் புதிய ஸ்டேடியம் அமைக்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய ஸ்டேடியமாக இது அமையவுள்ளது.

error: Content is protected !!