News July 31, 2024
சீர் மரபு இனத்தவர் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, போன்ற திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 11, 2025
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியன்று குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், எண் மாற்றம் போன்ற பணிகளை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இது நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
விழுப்புரம் மலையனூர் கோயிலின் தல வரலாறு தெரியுமா உங்களுக்கு?

சிவன், பிரம்மனின் ஒரு தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டார். தோஷத்தால் சிவனின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்க துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் சிவன் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். தேவி உணவுகளை மயானத்தில் சூறையிட கபாலம் சிவன் கையிலிருந்து வந்து தேவி கையில் அமர்ந்தது. தேவி அதனை தன் காலால் நசுக்கி மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். ஷேர் பண்ணுங்க.