News July 30, 2024
கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கேரளத்தில் 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (31.07.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்கள் இயங்காது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Similar News
News December 5, 2025
அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.
News December 5, 2025
அதானி குழுமத்திற்கு ₹48,000 கோடி கொடுத்த LIC

அதானி குழுமத்தின் கடன்களை தீர்க்க LIC பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்தில் LIC ₹48,284.62 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முதலீட்டை செய்ய சொல்லி அரசு உத்தரவிடவில்லை எனவும், LIC தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


