News July 30, 2024

மேட்டூர் அணை ஒரு பார்வை

image

மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணையில் ஒன்றாகும். காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் 1925ஆண்டு துவங்கி 1934ஆம் ஆண்டு கர்னல் எல்லீஸ் வடிவமைப்பின் படி ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அணையின் உயரம் (ம) அகலம் 214 மற்றும் 171 அடி ஆகும். இந்த அணையில் அதிகபட்சம் சேமிப்பு 120 அடி ஆகும். இந்த அணையால், 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Similar News

News August 22, 2025

சேலம் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT

News August 21, 2025

யூரியாவைப் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News August 21, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

error: Content is protected !!